ரஷ்யாவில் பரவியிருக்கும்
Orthodox சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஜனவரி 19ஆம் தேதி, உறைந்த நீரில்
குதித்து Epiphanyயை கொண்டாடினார்கள்.
இயேசுநாதர், ஜோர்டன் நதியில்
திருமுழுக்கு வைபவத்தை நிறைவேற்றிய நாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி
19ஆம் தேதி இதைச் செய்கிறார்கள். இந்நாளில்,
புனித நீராடுவதனால், தங்கள் பாவங்கள் கழுவப்படும் என்பது மக்களின் நம்பிக்கை.
ரஷ்யா இப்பொழுது குளிர் காலத்தின்
மத்தியில் இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி
மக்கள் புனித நீராடுவதற்காக, மாஸ்கோவில் இருக்கும் ஒரு உறைந்த ஏரியில், ஓட்டை ஏற்படுத்தப்பட்டு,
பாதிரியார்களால் அந்த நீர் புனிதபடுத்தப்பட்டது.
சிலுவை தொங்கும் வெள்ளை உடை அணிந்திருந்த
ஒருவர், “எனக்கு குளிர் தெரியலை” என்று coolஆக சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். சிலர், குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கு நல்லது
என்ற நம்பிக்கையோடு நீரில் இறங்கினார்கள்.
மைனஸ் 13 டிகிரி செல்ஷியஸ் நீரில்
குதித்த ஒருவர், “உள்ள போகும்போதுதான் குளிரா இருந்துச்சு. வெளிய வரும்போது இதமா இருக்கு. தண்ணி சூடாத்தான் இருக்கும் போல” என்கிறார்.
மாஸ்கோவில் இப்படியிருக்க, St.Petersburg
நகரத்தில், ஒரு கூட்ட மக்கள், ஐஸ் தண்ணீரில் நீந்திய அதிகபட்ச மக்கள் என்ற சாதனையை
படைக்க தயாராகிவிட்டனர்!
சிலுவை போன்று வெட்டப்பட்டிருந்த
துவாரத்தின் வழியாக ஒவ்வொருவராகக் குதித்தனர்.
அந்த நாள் முழுவதும் நீரில் குதிப்பவர்களை cameraவில் பதிவு செய்து சாதனையை
அங்கிகரிக்கும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த
காட்சி, பனி பிரதேச பிராணிகளின் செய்கை போல காட்சியளிப்பதால், குளிர் காலத்தில் இதுபோன்று
செய்கிறவர்களுக்கு Walrus அல்லது மோர்ழி என்கிற பெயரும் உண்டாம்! <^:-:^>